Tuesday 22 December 2009

தமிழீழம்

எனது ஈழக் கனவு
தனித் தமிழீழம் வேண்டும் - அதில்
தமிழினம் மட்டுமே வாழ வேண்டும்.
புரட்சி வெடிக்கும் முகத்தில் - துளிப்
புன்னகை மலர வேண்டும்.
வெறியாட்டம் கண்ட கண்கள் - இனி
வாண வேடிக்கைகள் காண வேண்டும்.
சயனைடு எடுத்தக் கைகள் - இனிச்
சாகுபடி செய்ய வேண்டுமே தவிரச்
சாகும்படிச் செய்யக்கூடாது.
சாவுகளைக் கண்ட மனிதர்கள் - மனச்
சாந்தத்தோடு வாழ வேண்டும்.
ஆயுதம் ஏந்தி நடந்த கால்கள் - கடவுள்
ஆலயம் நோக்கி நடக்க வேண்டும்.
வெடிகுண்டு ஏந்திய கைகள் - தமிழ்
வெண்பாட்கள் இயற்ற வேண்டும்.
குண்டு விழுந்த கானகங்களில் - குயிலின்
கானம் கேட்க வேண்டும்.
ஈழத்திற்காக உயிர்த் துறந்தவர்களை - எந்நாளும்
தமிழினம் போற்றிப் பாட வேண்டும்.
மனிதர்களை வதைத்தவர் நெஞ்சில் - இனியாவது
மனிதம் மலர வேண்டும்.
தனித் தமிழீழம் வேண்டும் - அதில்
தமிழினம் மட்டுமே வாழ வேண்டும்.

1 comment:

  1. ஆயுதம் ஏந்தி நடந்த கால்கள் - கடவுள்
    ஆலயம் நோக்கி நடக்கலாம்.
    அங்கு எம் மாவீரர்கள் தான் கடவுளாய் இருப்பார்கள்.
    தான் இறந்து எங்களை வாழ வைத்த கடவுள் அவர்கள்தான்.

    ReplyDelete